திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 நவம்பர், 2022

திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்திற்க்கு முன்பு பால் விலை, மின் கட்டன விலை, சொத்து வரி  உயர்வை கண்டித்து நகர பாஜக சார்பில் நகர தலைவர் வேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுசெயலாளர் வெங்கட்ராஜ் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு பட்டியலின மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மெளன குரு, கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் பசுபதி, ஒன்றிய துனைத் தலைவர் ராமசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் முருகன், மண்டல விவசாய அணி தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால், மின்சாரம், சொத்து வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல்   மக்கள் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கே ஆளாக்கி உள்ளது.


எனவே உடனடியாக சொத்து வரி, பால் விலை, மின்கட்டண விலை உயர்வை ரத்து செய் அல்லது பதவியை ராஜினாமா செய் என ஆக்ரோஷமாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பிற்பட்டோர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நரேன் கார்த்திக், நகர செயலாளர் சத்யவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad