மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 நவம்பர், 2022

மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம்


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் இன்று (23.11.2022) நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தலைமையேற்று, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.


இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற பல வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். 


அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்பதற்காகவும், அத்தகைய அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை ஆய்வு செய்திடவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராகிய நான் நேற்றைய தினம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலத்தில் உள்ள அரசு சமுதாய உடல்நல மையத்தினையும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டேன். இன்றைய தினம் நடைபெறுகின்ற ஆய்வுக்கூட்டத்தில் ஒவ்வொரு துறையின் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


தருமபுரி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், வேளாண்மை வளரச்சிக்கும், விவசாயிகளின் உயர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் ஏதாவது ஒரு திட்டங்களின் மூலம் ஒரு விவசாயி அல்லது ஒரு பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 


தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ள 57 கிராமங்களிலும் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து, அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து, ஒவ்வொரு நபரும் அரசின் ஒரு திட்டங்களிலாவது பயன்பெறுகின்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைவதை கண்காணித்திட வேண்டும். மேலும், அரசுத்துறைகளின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்ற சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் தாமதமின்றி மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும், கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை அரசுத்துறை அலுவலர்கள் முனைப்புடன் மேற்கொள்வதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைப்பதையும் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அரசு முதன்மை செயலாளர்  / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தெரிவித்தார். 


இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சமுத்துவபுரங்களில் மேற்கொள்ளபட்டு வரும் பழுதுநீக்கம், உட்கட்டமைப்பு வசதிகள், பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக மறுவீடுகள் கட்டுதல் மற்றும் புனரமைத்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்தும், தருமபுரி நகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் சக்தி அபியான் குடிநீர் திட்டம், தூய்மை பாரத இயக்கம் 2.0, அம்ருத் 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பட்டா வழங்கல் பணிகள், வடக்கு கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், தயார்நிலையில் இருத்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும், தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்டவை குறித்தும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் அங்கன்வாமையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் ஒவ்வொரு துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.


பின்னர், இன்று நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளி திரு.சின்னதம்பி என்பவர் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மரணமடைந்ததை முன்னிட்டு, அவரின் நியமனதாரரும் அவரது மனைவியுமான திருமதி.கல்யாணி அவர்களுக்கு ரூ.5.00 இலட்சம் விபத்து மரண நிவாரண நிதி உதவிக்கான ஆணையினை வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திரு.கே.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி. மரியம் ரெஜினா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. எம். சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.யு.ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் / மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ஜான்சிராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தொழிலாளர் நலத்துறை சேலம் இணை ஆணையர் திரு.எல்.ரமேஷ், உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு.சி.வெங்கடாஜலம், உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.சி.முத்து உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad