இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தகடூர் புத்தக பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் கலந்துகொண்டு படிப்பு வட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது. பாட புத்தகங்களுக்கு அப்பால் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் உருவாக வேண்டும். நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களிடம் ஏற்பட வேண்டும். அறிவியல் கண்ணோட்டமும் அறிவியல் சிந்தனையும் உருவாக வேண்டும்.

கதை புத்தகங்களின் வழியே மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் உருவாகி உரையாடல்கள் தொடங்க வேண்டும். மாதந்தோறும் நூல் அறிமுக கூட்டம் நடத்தி நூல்களை அறிமுகம் செய்வதன் மூலமாக மாணவர்களின் வாசிக்கும் பழக்கம் மேலும் வலுப்பெறும். மூடநம்பிக்கை மூட பழக்க வழக்கங்கள் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை மாணவர்களிடையே கலந்துரையாடல் மூலம் பேசினார். முன்னதாக 10 மாணவர்கள் கதை புத்தகங்கள் அறிமுகப்படுத்தினர்.
அந்த மாணவர்களுக்கு தகடூர் புத்தகப் பேரவையின் சார்பாக அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை மற்றும் சுட்டி யானை சிறுவர் இதழ் புத்தகமும் பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலகர் பூபதி, பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, திலகவதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக