பொம்மிடி அருகே பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் சாக்கடை நீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியை கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சி பட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே சாக்கடை கழிவுகள் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி கிடந்தது, இது குறித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர், வளர்ச்சி திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தீபனா விஸ்வேஸ்வரி சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்று இரவு 7 மணி அளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டு வரும் கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் இளம் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர், அப்போது கூடுதல் ஆட்சியர் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக