கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 நவம்பர், 2022

கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது, 


இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் முன்னிலை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  சபரி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மங்கம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.. பள்ளி இருபால் ஆசிரியர்,பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.


காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,  வாழ்த்துக்களை கூறி பிறகு இனிப்பு வழங்கப்பட்டது  குழந்தைகள் தின விழா முன்னிட்டு பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரை, நடைபெற்றது இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது . விழாவின் முடிவில் அறிவியல் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad