இக்கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை அலுவலர்களிடம் வழங்கி இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

இதன்படி, இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணிபுரிந்து எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவால் கடந்த 29.04.2022 அன்று பணியிடையில் மரணமடைந்த திரு.பிரபாகரன் என்பவரின் மனைவி / வாரிசுதாரரான திருமதி.ல.சங்கீதா அவர்களுக்கு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சாந்தி இஆப., அவர்கள் பேதாதம்பட்டி ஊராட்சி, வாச்சாத்தி கிராமத்தில் இன்று (16.11.2022) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் திருமதி.ல.சங்கீதா அவர்களிடம் வழங்கினார்கள்.
இப்பணி ஆணையினை பெற்றுக்கொண்ட திருமதி.ல.சங்கீதா அவர்கள் தான் தன் கணவரை இழந்து வாழ்வாதரத்திற்கு வழியின்றி குழந்தைகளோடு தவித்துக்கொண்டிருந்த தனக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி வழங்கிட ஆணையிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன் எனவும், தனக்கு மறுவாழ்வு அளித்ததுபோல் மனு வழங்கிய 7 நாட்களுக்குள் என் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையினை வழங்கியுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சாந்தி இஆப., அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக