
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ், இரவு சரண் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அறையின் மின்விசிறி கொக்கியில் கயிறால் தூக்கில் தொங்கியது தெரிந்தது. இதுகுறித்து சரண் தந்தை வடிவேலு மற்றும் மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
போலீசார், சரண் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, சரண் தங்கி இருந்த அறையில் இருந்து தற்கொலைக்கான கடிதம், செல்போனை ஆய்வு செய்த போது, மாணவன் சரண், தனது செல்போனில் கோல்டு காயின்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது. அதில் அதிகளவில் பணத்தை கோல்டு காயின்ஸ் விளையாட்டில் இழந்ததும், இதற்காக பலரிடம் சரண் கடன் வாங்கி இருந்ததும், வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக