அரசு விதை பண்ணையில் அரசு பள்ளி வேளாண் மாணவ-மாணவிகளுக்கு நேரடி விவசாய தொழில்நுட்ப பயிற்சி முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 நவம்பர், 2022

அரசு விதை பண்ணையில் அரசு பள்ளி வேளாண் மாணவ-மாணவிகளுக்கு நேரடி விவசாய தொழில்நுட்ப பயிற்சி முகாம்.

விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை வேளாண்மை பாட பிரிவில் படிக்கும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசுபள்ளியில்  வேளாண்மை பாடப்பிரிவில்11ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ மாணவிகளுக்கு நேரடி விவசாய பயிற்சி முகாம் பாப்பாரப்பட்டி மாநில அரசு விதை பண்ணையில் நடைபெற்றது. 

இந்த பயிற்சி முகாமில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஏரியூர், ஏலகிரி, இருமத்தூர், கம்பைநல்லூர் ஆகிய பள்ளிகளில் வேளாண்மை பிரிவில் படிக்கும்  250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பயிற்சிகளை பென்னாகரம் வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணி, வேளாண் அலுவலர் தமிழிசை, வேளாண் உதவி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர். 


இந்த பயிற்சியில் மாணவர்கள் விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, விதை சேமிப்பு கிடங்கு விதை உற்பத்தி தொழில்நுட்பம் போன்றவற்றை மாணவர்கள் செய்முறையாக செய்து பார்த்தனர். இந்த பயிற்சி முகாமை வேளாண் ஆசிரியர்கள் கிருஷ்ணன், புஷ்பா, தாரகேஸ்வரி, வசுமதி, சசி, மாயக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad