பென்னாகரம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகரசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூத்தபாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெண்ணிலா அருள் மொழி, கெம்புராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களை சார்ந்தோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக