பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். குட்டி அவர்கள் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். குட்டி அவர்கள் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார்.

தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்து வந்த ஒன்றிய செயலாளர் கே.எஸ்.குட்டி அவர்கள் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற புலிக்கரை கால்வாய் வெட்டும் பணிக்கான பூமி பூஜையின் அரசு விழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் இச்செய்தி தர்மபுரி திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மாவட்ட செயலாளர் இன்பசேகரன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி, மாநில வர்த்தக அணி அமைப்பாளர் தர்மசெல்வன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.