பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் ஸ்ரீ பாலதண்டாயுபாணி கோவில் மகாகும்பாபிஷேகம் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 டிசம்பர், 2021

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் ஸ்ரீ பாலதண்டாயுபாணி கோவில் மகாகும்பாபிஷேகம் விழா.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி போலுமலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த  5ம் தேதி ஞாயிற்றுகிழமை கணபதி பூஜையுடன்தொடங்கியது. நேற்று புதன்கிழமை  அதிகாலை 4.30 மணிக்கு கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து கலச தீர்த்தத்தை எடுத்து சென்று  கோயில் உச்சியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார். பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  காலை முதல்  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியினை பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கி நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.