ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா.
தமிழ்நாடு ஏஐடியூசி தருமபுரி மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் கொடி ஏற்றும் விழா மற்றும் பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி பி.அக்ராகரத்தில் டைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இச்சங்கத்தின் தலைவர் வேடியப்பன் தலைமை வகித்தார்.செயலாளர் பாபு வரவேற்றார்.ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.கோணங்கிஅள்ளி ஊராட்சி நிர்வாகி தங்கமணி பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஏஐடிியூசி மாவட்ட தலைவர் எம்.மாதேஸ்வரன்,மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நடராஜன்,கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் குழந்தைவேலு,மாவட்ட துணைத் தலைவர் இராமன்,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன்,சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஆகியோர்பேசினார்கள்.இறுதியில் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் ராமர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக