காவல் துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காவல் துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

தருமபுரி மாவட்ட காவல் துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாமானது அதியமான்கோட்டை கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அதியமான் கோட்டத்தில் தருமபுரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. C.கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.P.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து வரவேற்புரை நல்கினார். மேலும் அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.C.ரங்கசாமி , அதியமான்கோட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.மங்கம்மாள் குமார், நல்லம்பள்ளி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மூர்த்தி மற்றும் தங்கவேல் மண்டி மேலாளர் திரு.குப்பன் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகள் , மத நல்லிணக்கம், மனித நேயம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் உரையாற்றுகையில் ஒரு குடும்பத்தின் , ஒரு கிராமத்தின் , ஒரு மாவட்டத்தின் , ஒரு மாநிலத்தின் மற்றும் ஒரு தேசத்தின் வளர்ச்சியானது அனைத்து சமூகத்தின் ஒற்றுமையில் தான் சாத்தியமாகும் எனவும் , எனவே அனைவரும் சாதி, சமய வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ வலியுறுத்தினார். இம்முகாமில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

முகாமில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். இறுதியாக தருமபுரி மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளிஇயல் ஆய்வாளர் திரு.ராகுல் காந்தி அவர்கள் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad