பென்னாகரம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் தூய்மைப் பணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 டிசம்பர், 2022

பென்னாகரம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் தூய்மைப் பணி.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி சார்பாக தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் பென்னாகரம் பேரூராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 



இந்நிகழ்ச்சி பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை  துவங்கியது  வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம்,முள்ளுவாடி, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், வட்டாச்சியர் அலுவலகம், காவல் நிலையம், காவேரி ரோடு உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில்  தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் ,கடைகள் உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு முக கவசம், மஞ்சள் பை உள்ளிட்டவற்றையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வீரமணி,  பேரூராட்சித் துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad