பிரதமரின் "கிசான் சம்மான் நிதி" திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம், ஆண்டுக்கு ரூ.6000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை சரி செய்தால் மட்டுமே திட்டத்தின், அடுத்த தவணைத் தொகையைப் பெற முடியும். நல்லம்பள்ளி வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 9 ஆயிரம் விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.

பி.எம் கிசான் நிதி திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள் கிசான் வலைதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் பதிவைப் புதுபித்து கொள்ள வேண்டும்.
இணைதளத்தில தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால், ஓடிபி எண், தங்களது செல்போனுக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம். கிசான் திட்ட இணைதளத்தில் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வரும் 30-ம் தேதிக்குள் பதிவைப் புதுபித்து, தொடர்ந்து உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக