Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மின்வாரிய தொழிற்ச்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது.


மின்வாரிய பணியாளர்களுக்கு 2019 டிசம்பர் 1 ம்தேதிமுதல் வழங்கவேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். 58000 காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 100-ன்படி மின்வாரிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டிய முத்தரப்பு ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும்.

வாரிய ஆணை எண் 2 ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கான விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்க வேண்டும். பிரிவு அலுவலகங்கள், உபகோட்டங்கள், நிர்வாக பிரிவுகள் உள்ளிட்டவைகளை மறு சீரமைப்பு என்ற பெயரால் தொழிற்சங்கங்களோடு கலந்து பேசாமல் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, 2023 ஜனவரி 10ல் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று சலுகைகளை மற்றும் உரிமையை காக்க வேண்டும் என விளக்க கூட்டத்தில் வலியுறுத்தினர்.


சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ம்நிலதுணைத்தலைவர் பி.ஜிவா தலைமை வகித்தார. மாவட்ட செயலாளர் தி.லெனின்மகேந்திரன், பொருளாளர் சீனிவாசன் தமிழ்நாடு மின்வாரிய எலக்ட்ரிசிட்டி எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளர் எஸ்.கோகுல்தாஸ்,தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் சி.முருகன், டாக்டர் அம்பேத்கர் எம்பிளாயீஸ் பெடரேஷன் திட்ட துணை செயலாளர் வினோத், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வ்கிகள் பங்கேற்று பேசினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884