Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

விவசாயிகள் பி எம் கிஷான் திட்டத்தில் ஈகேஒய்சி புதுப்பிக்க கடைசி நாள் 31.12.2022அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்.


அரூர் வேளாண்மை துறை  வேளாண்மை உதவி  இயக்குனர் திருமதி சரோஜா அவர்கள் விவசாயிகளுக்கு விடுத்துள்ள  செய்தியில் பிரதம மந்திரியின் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.



இத்திட்டத்தில் அரூர் வட்டாரத்தில் இன்னும் 2507 விவசாயிகள் இ கே ஒய் சி புதுப்பித்தல் செய்யாமல் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் வருகின்ற 31.12.2022 அன்றுக்குள் அருகில் உள்ள மக்கள் கணினி மையம் சென்று விவசாயிகளுடைய ஆதார் எண் மற்றும் கைபேசி எண் மற்றும் ஓடிபி எண் விவரங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொண்டால் வருகின்ற 13 வது தவணையில் விவசாயிகளுக்கு உரிய தவணை அவர்களது வங்கி கணக்கில் கிடைக்கும். 



மேலும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் அவர்களுடைய கைப்பேசி எண் இணைக்காமல் உள்ள விவசாயிகள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து ஈகேஒய்சி புதுப்பித்துக் கொள்ளலாம்.


விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 31 12 2002 தேதிக்குள் ஈகேஒய்சி புதுப்பித்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு செய்தி கூறியுள்ளார்கள், மேலும் 2507 விவசாயிகளுடைய விவரங்கள் அரூர் வேளாண்மை துறை மற்றும்  தோட்டக்கலை துறை அலுவலகத்தில் உள்ளது.


மேலும் மேற்கண்ட 2507 பயனாளிகளுக்கும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அனைத்து திட்ட பணியாளர்களும் விவசாயிகளுக்கு கைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டும் மற்றும் கிராமங்களில் முகாம்கள் நடத்துதல் மற்றும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இந்த தகவலை தெரிவித்து வருகிறார்கள். 


இந்த விவரங்கள் மக்கள் கணினி மையங்களுக்கும் வேளாண்மை துறையின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது எனவே இந்த குறுகிய காலத்தில் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சரோஜா அவர்கள் விவசாயிகளுக்கு  கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884