Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மாற்று திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவிகள்  விழிப்புணர்வு ஊர்வலத்தை  பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி  தக்காளிமண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.


இந்த விழிப்பு ஊர்வலத்தில் மாற்று திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல்,  சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வு காணுதல் ஆகியவை பற்றி மாணவிகள்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா, பள்ளியின்   SMC  குழு தலைவர், உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள்  மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884