சின்னபள்ளத்தூர் மாணவர்களின் புத்தக திருவிழா பயணம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜூன், 2022

சின்னபள்ளத்தூர் மாணவர்களின் புத்தக திருவிழா பயணம்.

பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தருமபுரி புத்தக திருவிழாவிற்கு பள்ளியின் சார்பில் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு முழுவதும் சேர்த்து வைத்த உண்டியலை பணத்தில் மாணவர்கள் புத்தக திருவிழா அரங்குகளில் புத்தகங்களை வாங்கினர்.  மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக சிறுசேமிப்பு புத்தக உண்டியல் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி  வாங்கி கொடுத்தார்.  மாணவர்கள் அடுத்த புத்தக திருவிழாவிற்கு சிறு சேமிப்பு உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து வந்து புத்தகம் வாங்குவதற்கான பயிற்சியை இந்த சிறுசேமிப்பு பழக்கம் உருவாக்கும்.  இந்த நிகழ்வில் தகடூர் புத்தக பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன், பள்ளி ஆசிரியர்கள் பழனிச்செல்வி, திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.