மாரண்டஅள்ளி பேரூராட்சி சந்தைப்பேட்டையில் பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் செயல் அலுவலர் சித்திரைக்கனி ஆகியோரின் உத்தரவின் பெயரில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை பூஜை போட்டு தொடங்கி வைத்த 11வது வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி சந்தைப்பேட்டையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வசதி கேட்டு 11வது வார்டு பொதுமக்கள் காத்திருந்த நிலையில் வார்டு கவுன்சிலர் சிவகுமார் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து ரூபாய் 2.5 லட்சம் தொகையை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்கள் 11ஒரு வார்டில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் தற்பொழுது சந்தைப்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நேற்று காலை போர்வெல் அமைக்கும் பணியைய் பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 11 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் சிவகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக