Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பஸ் நிலையம் பகுதியில் திமுக ஒன்றிய,நகர கழக  சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பாலக்கோடு  பேரூர் கழக  செயலாளரும் பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி  தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பசேகரன் கலந்து கொண்டு  ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை துவக்கி வைத்து கோடை வெயிலின்  தாக்கத்தில் இருந்து  பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர், வெள்ளரி  உள்ளிட்டவைகளை  பொதுமக்களுக்கு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குட்டி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சூடப்பட்டி சுப்பிரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி மோகன், பேரூராட்சி துணை தலைவர் அசினா இதயத்துல்லா, மாவட்ட நெசவாளர் அணி பட்டு அஜிஸ்சுல்லா, முன்னாள் நகர, செயலாளர் கிருஷ்ணன், அவைத்தலைவர் ராஜி,பொருளாளர் துரை, துணைச் செயலாளர் பாபு, தொழில் நுட்ப அணி ஆனந்த,சுரேஷ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் விஜயன், கவுன்சிலர்கள் பத்தேகான், சரவணன்,  அருள்,  சாதிக் பாஷா, பிரியா சிவகுமார், லட்சுமி ராஜா, தீபா சரவணன், வார்டு செயலாளர்கள் பாபு (எ) முத்துராஜா, அமீர்ஜான், முருகேசன், பெரியசாமி,சுகுமார், ஜி.பி,சரவணன், மாரியப்பன், ஆறுமுகம்,மன்சூர், கணேசன்,சிவா, ஆட்டோ அன்வர், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், சரவணன்,முத்துசாமி குமரேசன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன்,குட்டி, மதியழகன்,பாடி கிருஷ்ணன் மற்றும் குமரேசன், முருகன், நாகராஜ், முனியப்பன் உள்ளிட்ட  பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்ட திமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies