Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அளவில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

வ.உ.சி இலக்கிய வானம் அமைப்பின் சார்பில் வ.உ.சி 150 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் தருமபுரி மாவட்ட அளவில் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கவிஞர் மாம்பாடி இரவீந்திர பாரதி தலைமை வகித்தார், கவிஞர் ஜோல்னா ஜவஹர் தொடக்கவுரை ஆற்றினார்.

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி முன்னிலை வகித்தார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் வாழ்த்துரை வழங்கினார். இளந்தென்றல் சி.சரவணன்,   ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நடுவராக இருந்தனர். 

நிறைவில் கவிஞர் இளவரசன் நன்றியுரை கூறினார். பேராசிரியர்கள் பெ.கார்த்திக், மு.சிங்காரவேலன்,  நிகழ்வில் பங்கேற்று சிறபபித்தனர், கல்லூரி அளவில் பரிசு பெற்றோர் விவரம்: முதல் பரிசு த.தங்கமுத்து,  தருமபுரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி, இரண்டாம் பரிசு சி.காவியா, காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பள்ளி அளவில் பரிசு பெற்றோர் விவரம் முதல் பரிசு ர.செளபரணி சின்னவத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies