அதன் விளைவாக கடந்த ஜனவரி 28ஆம் தேதியிட்ட கடிதத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரிடமிருந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டி என் வி. செந்தில்குமார் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் TN29 பதிவு கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு சலுகையில் மாதாந்திர மற்றும் ஒரு வழி பயன்பாட்டிற்கு கட்டணங்களை தெரிவித்துள்ளார்.
அதில், வகை 1ல், சுங்கசாவடியிலுருந்து 10கிமி சுற்றளவு கொண்ட இடங்களிலுள்ள வாகனங்களுக்கு மாதம் ரூபாய். 150லும், வகை 2ல் சுங்கசாவடியிலிருந்து 20கிமி சுற்றளவு கொண்ட இடங்களிலுள்ள வாகனத்திற்கு மாதம் ரூபாய். 300ம் செலுத்தி மாதந்திர பயண அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பள்ளி வாகனங்களுக்கு மாதம் ரூபாய். 1000மும், இலகுரக வாகனத்திற்கு ஒரு முறை பயண கட்டணமாக ரூபாய்.15ம், பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூபாய்.25ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே பாளையம் சுற்றுவட்டார வாகன உரிமையாளர்கள் இந்த சலுகைகளை பயணப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக