மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலைகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு முறை திட்டத்தின் கீழ் 15.09.2021 முதல் 15.11.2021 வரை அரவை செய்து கண்டு முதல் அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 07.09.2021 முதல் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு, நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தரமான அரிசியை பொதுவிநியோகத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது. மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இணையாத தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலைகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு முறை திட்டத்தின் கீழ் 15.09.2021 முதல் 15.11.2021 வரை அரவை செய்து கண்டு முதல் அரிசியினை கிடங்கில் ஒப்படைப்பு செய்திட ஏதுவாக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 07.09.2021 முதல் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளர்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில் கலர் சார்ட்டர் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட தருமபுரி மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.