Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், மற்றும் ரூ.10,000/- ரொக்கப்பரிசு ஆகியவற்றை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (06.09.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்று விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், மற்றும் ரூ.10,000/- ரொக்கப்பரிசு ஆகியவற்றை இன்று வழங்கினார்.

அறியாமை என்ற இருளை நீக்கி அறிவுக் கண்ணைத் திறந்திடும் மகத்தான பணியினை ஆற்றிவரும் ஆசிரிய பெருமக்களை கௌரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு வருகிறது.

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுற்கு தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 1 மெட்ரிக்பள்ளி ஆசிரியர் என மொத்தம் 9 ஆசிரியர்கள் மாநில தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர், திரு.வ. செந்தில் செல்வம் அவர்களுக்கும், பாலவாடி, அரசு உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், திரு. இரா. சிவமூர்த்தி அவர்களுக்கும், பொம்மஅள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியை, செல்வி. அ.சர்மிளா பேகம் அவர்களுக்கும், தருமபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர், திரு. ம.வெ. வாசுதேவன் அவர்களுக்கும், அருர் ஒன்றியம், இராயப்பன் கொட்டாய், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியர் திரு. கு. முருகன் அவர்களுக்கும், காரிமங்கலம் ஒன்றியம், குண்டல அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தலைமையாசிரியர் திரு.கு.சரவணன் அவர்களுக்கும், பென்னாகரம் ஒன்றியம், கோடி அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தலைமையாசிரியர் திரு. இரா சுப்பிரமணியன் அவர்களுக்கும், தருமபுரி ஒன்றியம், அதகபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமையாசிரியை திருமதி. கோ. அமுதா அவர்களுக்கும், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி சு.கவிதா அவர்களுக்கும் என் தருமபுரி மாவட்டத்தில் 2020-2021 ஆம் வி ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 9 ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டுச்சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், மற்றும் ரூ.10,000/- ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி. வே. ஹேமலதா, மாவட்டக்கல்வி அலுவலர்கள் தருமபுரி திரு. இரா.பாலசுப்பிரமணி, அரூர் திரு. மு.பொன்முடி, பாலக்கோடு திரு.தி.சண்முகவேல் உட்பட் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884